தமிழில் பங்குச்சந்தை

பங்குச்சந்தை செய்திகள், அலசல்கள், வாய்ப்புகள், உயர்வு, சரிவு….

பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் தீவிரவாதிகள்

பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 15, 2007

தீவிரவாத இயக்கங்களுக்கு பங்குச்சந்தை மூலம் பணம் கிடைப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக மும்பை மற்றும் சென்னை பங்குச்சந்தையில் இவர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் நாராயணன் கூறியிருக்கிறார்.

மும்பை பங்குச்சந்தையை குறிப்பிடும் அதே நேரத்தில், சென்னை பங்குச்சந்தையை நாராயணன் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பங்குச்சந்தையில் அதிக அளவு வர்த்தகம் நடப்பதில்லை. சென்னை பங்குச்சந்தையை நாராயணன் குறிப்பிட்டுள்ளது விடுதலைப் புலிகளை குறித்து தான் இருக்க முடியும் என்று தெரிகிறது. விடுதலைப் புலிகள் பல நிறுவனங்களை நடத்துவதாகவும், அதில் பங்குச்சந்தை வர்த்தகமும் ஒன்று என நாராயணன் கூறியுள்ளார்

விடுதலைப் புலிகளின் இந்த முறையை ஜிகாதி இயக்கங்களும் கடைபிடிக்க தொடங்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

எம்.கே.நாராயணன் விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது

2 பதில்கள் -க்கு “பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் தீவிரவாதிகள்”

  1. பங்குவணிகம் சொன்னார்

    அருமை…அருமை…

    நண்பரே….தமிழில் பங்குசந்தை குறித்த உங்கள் வலைப்பதிவு முயற்சியினை வரவேற்கிறேன். தொடர்ந்து தகவல்களை பரிமாறிட வேண்டுகிறேன்…

    தமிழ் கூறும் நல்லுலகில் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  2. பங்குச்சந்தை சொன்னார்

    நன்றி நண்பரே

    பங்குவணிகம் தளம் மூலம் நீங்கள் வழங்கும் சேவையும் குறிப்பிடத்தகுந்தது

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>