பங்குச்சந்தையில் தீவிரவாதிகள் : உண்மை என்ன ?
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 16, 2007
பங்குச்சந்தையில் தீவிரவாதிகள் வர்த்தகம் செய்வதாக எம்.கே.நாராயணன் கூறியதை பங்குச்சந்தையை தீவிரவாதிகள் manipulate செய்வதாக பல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தின.
பங்குச்சந்தையை manipulate செய்யும் அளவுக்கு தீவிரவாதிகளிடம் பணம் இருக்கிறதா என்பதும் பங்குச்சந்தையில் சதி செய்ய பணம் தவிர பங்குச்சந்தை குறித்த விபரமான அறிவு தேவை என்பதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் இந்த பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியப் பங்குச்சந்தையின் வளர்ச்சி பெரும்பாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களாலேயே (FII) உயர்ந்துள்ளது. தீவிரவாதிகளும் இதில் முதலீடு செய்து லாபம் அடைகிறார்கள் என்பதே எம்.கே.நாராயணன் அவர்களின் கருத்து. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்
Sivabalan V சொன்னார்
அதிர்ச்சியளிக்கும் செய்தி!
இந்திய வர்த்தக அமைப்புகளுக்கு விடப்பட்ட மிகப் பெரிய சவால். அரசாங்கம் இதை மிகுந்த விழிப்புடன் இதை விசாரிக்க வேண்டும்!
குறும்பன் சொன்னார்
அரசு மிக கவனமாக இருக்க வேண்டிய, விழிப்புடன் செயலாற்ற வேண்டிய செய்தி.